சட்டப்பேரவையில் திமுகவை விமர்சித்த அமைச்சர் ராஜ்மோகன்!

 

திமுக எம்எல்ஏ எ.வ.வேலு பொதுக்கூட்டத்தில் பேசுவது போல சட்டப்பேரவையிலும் பேசி வருவதாக அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்தார். பேரவையில் உள்ள மைக், சேர் உள்ளிட்டவை திமுக ஆட்சியில்தான் அமைக்கப்பட்டதாக கூறுவதுடன், அரசின் அனைத்து திட்டங்களும் மக்களின் வரிப்பணத்தில்தான் செயல்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

கடந்த திமுக ஆட்சியில் அம்மா மினி கிளினிக், முதல்வர் கிளினிக்காக மாற்றப்பட்டதை அமைச்சர் சுட்டிக்காட்டினார். திட்டங்களின் பெயர்களை மாற்றும் நடைமுறை கலைஞர் ஆட்சியிலும் தொடர்ந்ததாக அவர் கூறினார்.

மேலும், ஆட்சிகள் மாறும்போது திட்டங்களின் பெயர்களை மாற்றுவது புதிதல்ல என அவர் குறிப்பிட்டார். இதுதொடர்பாக திமுக ஆட்சியின் நடவடிக்கைகளையும் அமைச்சர் ராஜ்மோகன் விமர்சித்தார்.

காலை உணவு திட்டத்திற்கு காமராஜர் பெயரே பொருத்தமானதாக இருக்கும் என்றும் அமைச்சர் ராஜ்மோகன் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.

Read Previous

முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் 2-வது திருமணம்: அரசு ஊழியர்களுக்கு அசாம் அரசு புதிய விதி!

Read Next

விஜய்க்கு அனைத்து விவரங்களும் தெரியும்; யாரும் வழிநடத்த தேவையில்லை: எ.வ.வேலு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular