சட்டப்பேரவையில் அமைச்சர் வன்னிஅரசு பேசியபோது பிரதமர் மோடி குறித்துக் கூறிய கருத்துகளை அவைக்குறிப்பில் இருந்து நீக்கிவிடலாம் என அமைச்சர் ஆதவ் அர்ஜுனா தெரிவித்துள்ளார்.
மேலும், கட்சிகள் குறித்து பேசுவதைத் தவிர்த்து, மாநில உரிமைகள் தொடர்பான விவகாரங்களை மட்டுமே முன்வைத்து பேசலாம் என்றும் அவர் கூறினார்.
முன்னதாக, அமைச்சர் வன்னிஅரசு தனது உரையில் மத்திய அமைச்சர் அமித்ஷா குறித்து குறிப்பிட்ட கருத்தை சபாநாயகர் அவைக்குறிப்பில் இருந்து நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.




