சிங்கப்பூரில் வசிக்கும் இந்திய கட்டுமான தொழிலாளி திருப்பதி மோகன்தாஸ் (41), அமெரிக்கப் பெண் ஒருவரை அவரது வீட்டின் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்து, பின்னர் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்து பலாத்காரம் செய்ய முயன்றார். அப்பெண் கூச்சலிட்டதால் தப்பி ஓடிய மோகன்தாஸ், சம்பவம் நடந்த இரண்டு நாட்களுக்குப் பிறகு மீண்டும் அங்கு சென்றபோது கைது செய்யப்பட்டார். நீதிமன்ற விசாரணையில் குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டதால், அவருக்கு 13 மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.




