உத்தரப்பிரதேசம்: லக்னோவில் உள்ள ஹரோனியில், தோட்டத்தில் வைத்து மைனர் சிறுமி கூட்டுப் பலாத்காரம் செய்யப்பட்டார். சிறுமி தனது தோழியுடன் சென்றபோது, விஷால், சோட்டு, பாபு, லலித் என்ற இளைஞர்கள் தோழியை அடித்து விரட்டிவிட்டு, சிறுமியின் ஆடையை கிழித்தெறிந்து சீரழித்துள்ளனர். சிறுமி கெஞ்சியும் அவர்கள் கேட்கவில்லை என்றும், எதிர்த்தபோது தாக்கியதாகவும், பின்னர் மாறி மாறி பலாத்காரம் செய்ததாகவும் பாதிக்கப்பட்டவர் வாக்குமூலம் அளித்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.




