சிவப்பு அரளிப்பூவில் இவ்வளவு ரகசியம் இருக்கா?.. இத்தனை நோய்க்கும் மருந்தாக இருக்கிறதா?..

🍁🍁சிவப்பு அரளிப்பூவில் இவ்வளவு ரகசியம் இருக்கா?… இத்தனை நோய்க்கும் மருந்தாக இருக்கிறதா?🍁🍁

 

செவ்வரளியின் விஷத்தன்மை அடங்கியிருக்கின்ற காரணத்தால், நாம் அதை அதிகம் நம் வீடுகளில் வளர்ப்பதில்லை. இதன் இலைகள் தொடங்கி பல பாகங்கள் நச்சுத் தன்மையாக இருந்தாலும்கூட செவ்வரளிப் பூக்களில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. இதனுடைய மணம் பலருக்கும் பிடிக்காது தான்.

 

ஆனால் இதிலிருந்து வரும் எளிமையான மணம் கமழும் செவ்வரளிப் பூக்கள் சித்த மருத்துவம், ஆயுர்வேத மருத்துவம் மற்றும் சீன மருத்துவங்களிலும் பல நாட்டின் பாரம்பரிய மருத்துவத்திலும் பயன்படுத்தப்படுகின்றன.

 

சிவபெருமான், விநாயகர் மற்றும் முருகன் ஆகிய மூன்று கடவுளருக்கும் பிரியமான மலர்களில் முதன்மையானது இந்த செவ்வரளி. பெரும்பாலான சிவன் கோவில்களில் நீங்கள் கவனித்துப் பார்த்தால் தெரியும் நிச்சயம் ஏதாவது ஒரு இடத்தில் செவ்வரளிச் செடியை வைத்திருப்பார்கள்.

 

இதனுடைய வேர் மற்றும் பட்டைகளில் அலனின், ஆர்ஜினின், குளோட்டமின், டைரோசின் ஆகிய ஆண்டி மைக்ரோபியல் பண்புகள் இருக்கின்றன. அவை காயங்களை ஆற்றும் தன்மை கொண்டது. அழுகிய நிலையில் இருக்கும் புண்களைக் கூட வேகமாக ஆற்றும் தன்மை கொண்டது.

 

வயதானவர்கள் மாதக் கணக்கில் படுத்த படுக்கையாக இருந்து இருநு்து படுகு்கைப் புண்கள் ஏற்பட்டிருக்கும். அதற்கு என்னதான் மருந்து போட்டாலும் சரியாவதில்லை. அப்படிப்பட்ட மோசமான புண்களையும் கூட இந்த செவ்வரளிப் பூக்களின் சாறு குணப்படுத்தி விடும்.

 

என்ன செய்தாலும் தீர்க்க முடியாத கடுமையான தலைவலியாக இருந்தால் அதற்கும் மருந்தாக இந்த செவ்வரளி பயன்படும். கடுகு, கேரட், பீட்ரூட் ஆகியவற்றின் சாறெடுத்து அதோடு நெல்லிக்காய் மற்றும் செவ்வரளியை அரைத்துச் சேர்த்து நெற்றியில் பற்றுப் போடுங்கள். எப்பேர்ப்பட்ட தலைவலியும் குணமாகும்.

 

தலையில் பேன்கள் மற்றும் பொடுகுத் தொல்லை அதிகம் இருந்தால் இனிமேல் அந்த கவலையை விடுங்கள். இரவில் தூங்குவதற்கு முன்பாக செவ்வரளிப் பூக்களை தலையில் முடிக்குள் சூடிக் கொண்டு படுத்துக் கொள்ளுங்கள். இப்படி தொடர்ந்து செய்து வந்தால் தலையில் இருக்கும் பேன்கள் வெளியேறிவிடும்.

 

செவ்வரளிச் செடியின் வேர்களைத் தண்ணீர் விட்டு நன்கு மை போல அரைத்து மூலநோய் கட்டி உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், மூல நோய் குணமாகும்.

 

செவ்வரளி மலர்களை அரைத்து முகத்தில் பருக்கள் உள்ள இடத்தில் தடவி வந்தால் முகப்பருக்கள் நீங்கி முகம் மென்மையாகவும் மிருதுவாகவும் மாறும். அதேபோல் மாசுக்களை நீக்கும் தன்மை கொண்டது இந்த அரளி.

 

குறிப்பு – செவ்வரளியை பயன்படுத்தும் போது பச்சையாக உபயோகிக்கக் கூடாது. முறையான சித்த மருத்துவர்களின் ஆலோசனையின் பேரில் மருந்தாக மட்டும் பயன்படுத்துவது தான் நல்லது. அதுவே நம்மை கடுமையான பல பக்க விளைவுகளில் இருந்தும் காப்பாற்றும்.

Read Previous

அரை கீரை பல வகை நன்மைகள் உடலுக்கு தரக்கூடியது..!! உடலுக்கு ரொம்ப நல்லது..!!

Read Next

மாறிப்போன உறவுகள்..!! அழகான காலங்களை ஞாபகம் படுத்தும் பதிவு இது..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular