கேரளாவின் கோட்டயம் அருகே நேற்று நடந்த விபத்தில் பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. வேகமாக வந்த கார் 2 ஸ்கூட்டர்கள் மீது மோதிய விபத்தில் படுகாயமடைந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 11 வயது சிறுமி, அவரது தாயார் ஜோமோல் சுனில் (35) மற்றும் மற்றொரு ஸ்கூட்டரில் சென்ற தன்யா சந்தோஷ் (38) ஆகியோரும் விபத்தில் இறந்தனர். காரை ஓட்டிச் சென்ற கல்லூரி மாணவர் சந்தூஸ் திரிஜி (24) என்பவரை போலீசார் கைது செய்தனர்.




