தஞ்சாவூர்: அறிவழகன் (37), மனைவி உஷா (35), மகள்கள் ரூபா (10), பாவ்யாஸ்ரீ (9), அறிவழகன் தங்கை மகள் தேஜாஸ்ரீ (4) ஆகிய ஐவரும் பைக்கில் சென்று கொண்டிருந்தனர். அப்போது பைக் மீது கார் மோதியதில் 5 பேரும் தூக்கி வீசப்பட்டனர். இதில் அறிவழகன், பாவ்யாஸ்ரீ, தேஜாஸ்ரீ சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். காயமடைந்த உஷா, ரூபா இருவரும் தஞ்சை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து போலீஸ் விசாரிக்கிறது.




