உத்தரப் பிரதேசம்: புலந்த்ஷஹரில் நடந்த பயங்கர சாலை விபத்தில் 8 பேர் உயிரிழந்த நிலையில் 45 பேர் காயமடைந்துள்ளனர். ராஜஸ்தானில் உள்ள கோயில் நோக்கி பக்தர்களை ஏற்றி சென்ற டிராக்டர் மீது கண்டெய்னர் லாரி மோதியதில் இந்த கோர விபத்து ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்தவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. போலீஸ் விசாரிக்கிறது.




