டெல்லியில் நேற்று நடைபெற்ற போராட்டத்தின் போது காவல்துறை தடியடியில் காயமடைந்து, ராம் மனோகர் லோகியா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் இளைஞர்களை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்தார்.
அப்போது, அவர்களின் உடல்நலம் குறித்து கேட்டறிந்ததுடன், வழங்கப்பட்டு வரும் மருத்துவ சிகிச்சைகள் பற்றியும் மருத்துவர்களிடம் மற்றும் பாதிக்கப்பட்ட இளைஞர்களிடம் விவரங்களை கேட்டறிந்தார்.




