தமிழகத்தில், அரசு உதவி பெறும் பள்ளிகளில் மட்டுமின்றி அரசு பள்ளிகளிலும் போலி சான்றிதழ்கள் அளித்து பலர் ஊழியர்களாகவும் ஆசிரியர்களாகவும் பணியில் சேர்ந்துள்ளனர் என புகார் எழுந்துள்ளது. எனவே, மாவட்ட வாரியாக அனைத்து ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களின் 10ம் வகுப்பு, பிளஸ் 2, ஆசிரியர் கல்வி, பட்டம், பட்டய படிப்பு சான்றிதழ்களின் உண்மை தன்மையை ஆராயந்து அதுகுறித்த அறிக்கையை டிச.31க்குள் சமர்ப்பிக்க கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.




