டீசல் விலை உயர்வு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரித்துள்ளதன் எதிரொலியாக, தமிழ்நாட்டில் லாரி வாடகைக் கட்டணத்தை இன்று (ஜூன்.15) முதல் 25 சதவீதம் உயர்த்துவதாக தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனம் அறிவித்துள்ளது. இந்த கட்டண உயர்வால் அத்தியாவசிய பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு சரக்குகளின் போக்குவரத்து செலவும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. புதிய வாடகை உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளதாகவும் சம்மேளனம் தெரிவித்துள்ளது.




