தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெற்று வரும் 3.28 லட்சம் மாணவர்களுக்கான ஆகஸ்ட் மாத தவணைத் தொகையான ரூ.1,000 அவர்களின் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்காக நடப்பாண்டில் ரூ.360 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், 2026–27 கல்வியாண்டில் உயர்கல்வியில் சேர்ந்த அரசுப் பள்ளி மாணவர்களுக்கும் தமிழ்ப்புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறும் வகையில் விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது. 6 முதல் 12-ம் வகுப்பு வரை அரசுப் பள்ளியில் படித்த மாணவர்கள் இந்தத் திட்டத்தின் மூலம் பயன்பெற உள்ளனர்.




