உங்கள் கையில் உள்ள பணத்தை சேமிக்க விரும்பினால், தபால் அலுவலகத்தின் தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) திட்டம் உங்களுக்கு ஒரு சிறந்த தேர்வாக இருக்கும். இந்தத் திட்டத்தில் யார் வேண்டுமானாலும் முதலீடு செய்யலாம். குறைந்தபட்ச முதலீடு ரூ.1,000 மட்டுமே செலுத்தலாம். கணவன் – மனைவி இருவரும் ஜாயிண்ட் அக்கவுண்ட் திறக்கலாம். இருவரும் சேர்ந்து ரூ.9 லட்சம் முதலீடு செய்தால், 5 ஆண்டுகளுக்குப் பிறகு உங்களுக்கு ரூ.13,04,130 கிடைக்கும். இதில், ரூ.4,04,130 வட்டியாக மட்டும் கிடைக்கும்.




