கேரளா: கண்ணூரில் அமைச்சர் ஏ.கே.சசீந்திரனின் சகோதரியின் மகள் ஸ்ரீலேகாவின் (69) மரணம் ஒரு கொலை என்பதை பிரேத பரிசோதனை அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது. ஸ்ரீலேகாவின் கணவர் பிரேமராஜன் (75), சுத்தியலால் தலையில் தாக்கி, பின்னர் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொளுத்தியுள்ளார். அவரும் தனக்குத் தானே தீவைத்து தற்கொலை செய்துகொண்டார். இவரும் நேற்று காலை உடல் கருகிய நிலையில் வீட்டில் சடலமாக கண்டெடுக்கப்பட்டனர்.




