தவெகவின் 100 நாள் ஆட்சிக்கு திருமாவளவன் பாராட்டு!

 

 

தவெகவின் 100 நாள் ஆட்சியை விசிக தலைவர் திருமாவளவன் பாராட்டியுள்ளார்.

 

திருவண்ணாமலையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்த 100 நாட்கள் தவெகவுக்கு கற்றுக்கொள்ளும் காலமாக அமைந்துள்ளதாக தெரிவித்தார்.

 

மேலும், 100 நாள் ஆட்சியில் எந்தத் துறையிலும் லஞ்சம், ஊழல் இல்லை என்ற பெயரை தவெக பெற்றுள்ளதாகவும், பலரும் இதை பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

 

இந்த நிலைப்பாட்டை தொடர்ந்து கடைபிடித்து, ஊழல் இல்லாத அரசாக 5 ஆண்டுகள் செயல்பட்டு தவெக சாதனை படைக்க வேண்டும் என்றும் திருமாவளவன் வலியுறுத்தினார்.

Read Previous

ஸ்வீடன் பள்ளியில் கத்திக்குத்து தாக்குதல்: ஒருவர் உயிரிழப்பு!

Read Next

சர்க்கரை விலை உயர்வுக்கு எத்தனால் காரணமல்ல: மத்திய அரசு விளக்கம்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular