முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது எம்.எல்.ஏ பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு, வரும் ஜூன் 22-ஆம் தேதி தவெகவில் இணைய உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே மாரகதம் குமரவேல், ஜெயக்குமார் உள்ளிட்ட 4 அதிமுக எம்.எல்.ஏக்கள் ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்துள்ள நிலையில், இவர்களின் இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




