தவெக அரசு ஜூன் மாதத்திற்கான மகளிர் உரிமைத் தொகை ரூ.1,000-ஐ இன்று வழங்கியுள்ள நிலையில், ரூ.2,500 எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இத்திட்டத்தை ‘மதிப்புமிகு மகளிர் திட்டம்’ என மறுசீரமைக்கக் கால அவகாசம் தேவை என முதல்வர் விஜய் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார். வரும் ஜூன் 22 சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் இதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகி, அடுத்த மாதம் முதல் ரூ.2,500 கிடைக்க வாய்ப்புள்ளதாகக் கூறப்படுகிறது.




