திமுகவில் பவள விழா பொதுகூட்டம் வருகின்ற செப்டம்பர் 28 இல் நடக்க இருப்பதால் அனைத்து திமுக கட்சி தொண்டர்களும் தலைவர்களும் கலந்து கொள்ள வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்….
திமுக பவள விழா பொதுக்கூட்டம் வரும் 28ஆம் தேதி காஞ்சிபுரத்தில் நடைபெற இருக்கிறது, இந்தக் கூட்டத்தில் திமுக கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது அந்த அழைப்பின் பெயரில் அனைத்து திமுக கட்சி தலைவர்களும் தொண்டர்களும் பொதுமக்களும் கலந்து கொள்ள வேண்டும் என முதல்வர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் கூட்டணி கட்சி தலைவர்கள் உரையாற்ற உள்ளனர் இந்த கூட்டத்தில் பங்கேற்க காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது, மேலும் பவள விழா பொதுக்கூட்டத்தில் அனைத்து திமுக தொண்டர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு முதலமைச்சர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்..!!



