விடுதலை சிறுத்தை கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்குமா என்ற கேள்வி மக்களிடையே எழுந்து வந்த நிலையில் தற்பொழுது அதிமுக தொண்டர்களிடையே கேள்வி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, மேலும் கட்சி நிர்வாகத்திற்கு விடுதலை சிறுத்தை கட்சியின் மாநாடு அழைப்பு வந்தால் பங்கேற்பதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிவித்துள்ளனர்…
விடுதலை சிறுத்தை கட்சியின் மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக கலந்து கொள்ளுமா என்ற கேள்வி பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது, என இபிஎஸ் இடம் கேள்வி எழுப்பப்பட்ட போது அதற்கு விடுதலை சிறுத்தை கட்சி தரப்பில் மாநாட்டுக்கு முறையாக அழைப்பு விடுத்தால் கலந்து கொள்வது குறித்து கட்சியின் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார், மேலும் ஒத்த கருத்துடைய கட்சிகள் வந்தால் கூட்டணியில் இணைந்து கொள்வோம் என்றும் அவர் சூசகமாக கூறியுள்ளார், மேலும் மக்களின் நலனை கருத்தில் கொண்டு மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்பதற்கான ஒப்புதல் கொள்வோம் என இபிஎஸ் தெரிவித்துள்ளார்…!!



