கரூர் மாவட்டம், தோகைமலை அருகே பாதிரிபட்டி பகுதியைச் சேர்ந்த திமுக முன்னாள் எம்எல்ஏ ராமர் (75) குறித்து, பாஜக பிரமுகர் கலைமணி (53) அண்மையில் தனது முகநூல் பக்கத்தில் அவதூறாகப் பேசியதாகக் கூறப்படுகிறது. இதையறிந்த ராமர் அளித்த புகாரின்பேரில், தோகைமலை காவல் நிலைய போலீஸார் நேற்று (அக்.12) கலைமணி மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர். அவரிடம் அவதூறு பதிவு குறித்து விசாரணை நடந்து வருகிறது.




