ஈரோடு மாவட்டம் பவானி அடுத்த லட்சுமிநகர் பகுதியில் உறவினர்களுடன் தங்கியிருந்த வெங்கடேஷ்-கீர்த்தனா தம்பதியினரின் 2 வயது பெண் குழந்தை, நள்ளிரவில் 3 பேர் கொண்ட கும்பலால் கடத்தப்பட்டுள்ளது. நேற்றிரவு பணியை முடித்துவிட்டு தற்காலிக கூரையில் குழந்தையுடன் தூங்கிக்கொண்டிருந்தபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. நள்ளிரவு 3 மணிக்கு விழித்த பெற்றோர் குழந்தையைக் காணாததால் அதிர்ச்சியடைந்து போலீசில் புகார் அளித்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம கும்பலைத் தேடி வருகின்றனர்.




