திண்டுக்கல் மாவட்டம் பழனி கோயில் நிலம் முறைகேடாக பதிவு செய்யப்பட்டதாகக் கூறப்படும் வழக்கில், சிபிசிஐடி போலீசாரால் கைது செய்யப்பட்ட சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன் உடல்நலக்குறைவு காரணமாக திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். ரத்த அழுத்தம் அதிகரித்ததைத் தொடர்ந்து அவருக்கு உள்நோயாளியாக சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த நில மோசடி வழக்கில் இதுவரை மொத்தம் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.




