தீபாவளியன்று சோகம்..!! பட்டாசு தீப்பொறி பட்டு 4 குடிசை வீடுகள் எரிந்து நாசம்..!!
சென்னையில் நேற்று தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடியபோது பட்டாசு தீப்பொறி பட்டு 4 குடிசை வீடுகள் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாகுல் ஹமீது என்பவர் எண்ணூர் மார்க்கெட்டில் ஜவுளி வியாபாரம் செய்து வருகிறார். இவருக்கு சொந்தமான வீட்டின் மொட்டை மாடியில் குடிசை வீடுகளை அமைத்து, அவரது சகோதரர்கள் குடும்பத்துடன் வசித்து வந்துள்ளனர். இந்த நிலையில் நேற்று தீபாவளியை மகிழ்ச்சியாக கொண்டாடியபோது பட்டாசு தீப்பொறி பட்டு எதிர்பாராத விதமாக குடிசைகள் மீது தீப்பொறி பட்டு கண்ணிமைக்கும் நேரத்தில் எல்லாமும் எரிந்து நாசமாகின. இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.




