தும்மும் போது சிறுநீர் கசியும் பிரச்சினை இருக்கா?.. அப்போ இந்த ஆபத்து நிச்சயம்..!!

பொதுவாகவே சில பெண்களுக்கு சிரிக்கும்போதும், இருமும்போதும், தும்மும்போதும் சிறுநீர் வெளியேறும் பிரச்சினை காணப்படுகின்றது. இது பெரிதும் அசௌகரியம் ஏற்படுத்தும் ஒரு நோயாக இருக்கின்றது.

சிறுநீருடன் தொடர்புடைய இந்த நோய் சிறுநீர் அடங்காமை என்று அழைக்கப்படுகிறது. இந்த பிரச்சினை ஏன் ஏற்படுகிறது? என்பது குறித்து இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

 

இந்த நோய் ஆண்களையும் பாதிக்கிறது. ஆனால் பெண்கள் தான் அதிகமாகப் பாதிக்கிறது. மூன்று பெண்களில் ஒருவருக்கு சிறுநீர் கசிவு பிரச்சனை இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

 

நோய்க்கான காரணங்கள் என்ன?

பெண்களின் அடிவயிற்றுத் தசைகள், அதாவது இடுப்புத் தசைகள், மாதவிடாய் நிற்கும் முன் அல்லது சில சமயங்களில் வயதாகும்போது பலவீனமடையும். இதனால் சிறுநீர் கசிவு பிரச்சனை ஏற்படுகிறது.

 

சில பெண்களுக்கு தீராத நோய், சரியான உணவுமுறை இல்லாமை அல்லது உடல் பலவீனம் போன்றவையும் சிறுநீர் கசிவை உண்டாக்கும் என்கின்றனர் நிபுணர்கள்.

இடுப்புத் தசைகள் பலவீனமாக இருக்கும் நிலையில் சிரிக்கும் போதும், இருமல், தும்மல் அல்லது ஏதேனும் கடினமான செயலைச் செய்யும் போதும், சிறுநீர்ப்பையில் அழுத்தம் ஏற்படும். இதனால் சிறுநீர் வெளியேறும்.

 

 

பிரசவத்திற்குப் பிறகு பெண்களுக்கு இந்தப் பிரச்சனை அதிகம். ஏனெனில், பிரசவத்தின் போது கீழ் முதுகின் தசைகள் அதிகமாக நீட்டப்படும். இது அவர்கள் மீது அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. அது அவர்களையும் பலவீனப்படுத்துகிறது.

 

உடல் பருமன், சர்க்கரை நோய் போன்றவையும் சிறுநீர் கசிவை உண்டாக்கும் என்கின்றனர் நிபுணர்கள். இந்த பிரச்சினையை சாதாரண விடயமாக கருதாமல் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இது சிறுநீரக செயலிலப்பின் அறி்குறியாக கூட இருக்கலாம்.

Read Previous

கடுகு கீரை.. புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் கடுகு கீரை..!! நன்மைகள் என்னென்ன?..

Read Next

IPL 2025..!! குறைந்த இலக்கை அடிக்க முடியாமல் தோத்துப்போன நடப்பு வெற்றியாளர்கள்..!! சிறப்பாக வழிநடத்திய ஷ்ரேயஸ் ஐயர்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular