Depressed man at night feeling alone and useless
தற்போதைய தலைமுறையினர் அனைவரும் புது புது நோயால் பாதிக்கப்படுகின்றனர். சிறு வயதிலேயே மன அழுத்தம் போன்ற பிரச்சனைகளால் பாதிக்கப்படுகின்றனர். அதற்கு முக்கிய காரணமாக தூக்கமின்மை பார்க்கப்படுகிறது. அணைத்து வயதினருக்கும் தற்போது தூக்கம் என்பது ஆறு மணி நேரம் கூட கிடைப்பதில்லை. அதனால் காலையிலேயே உடல் சோர்வு மன அழுத்தம் போன்ற விஷயங்கள் அவர்களை தாக்குகிறது. இதற்கு காரணம் நம் மனநிலை மற்றும் நமது உணவு பழக்கங்கள் தான்.
துரித உணவு உண்டு தூக்கத்தையும் தியாகம் செய்த தலைமுறை நாம். இதை நம்மால் கட்டுப்படுத்த முடியாது. ஏனெனில் நாம் வாழும் சமுதாயம் அப்படி. நவீன உலகம் நமக்கு நேரம் அதிகமாக கொடுப்பதில்லை. தனியே வீடெடுத்து தங்கி படிக்கும் இளைஞர்களுக்கோ அல்லது வேலை பார்பவர்களுக்கோ உணவு பழக்கம் சீராக இருக்காது.
அனால் யாருக்கும் தூக்கம் கெடுவது இனிமையாக இருக்காது. தூக்கம் தான் ஒரு மனிதனின் நாளை முடிவு செய்யும். நல்ல தூக்கம் அமைந்தால் அவர்களது நாள் பல நல்ல காரியங்களால் நிறைந்தவையாக இருக்கும். அப்படிப்பட்ட தூக்கத்தை நமக்கு திருப்பி தர சில பழங்களால் முடியும். அது என்னென்ன என்று காண்போம்.
பப்பாளி , கிவி , ஆப்பிள் , செர்ரி , வாழைப்பழம் போன்ற பழங்கள் நமது தூக்கத்தை சீராக்க உதவி செய்யும். அதன் காரணம் இதில் இருக்கும் நார் சத்து, வைட்டமின் ஈ, வைட்டமின் சி, போலெட், பொட்டாசியம். மேலும் இதில் சில பழங்கள் நம் மன அழுத்தத்தையும் குறைக்க பயன்படும். இதையெல்லாம் சாப்பிட்டு உங்கள் தூக்கத்தை அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.




