Oplus_131072
🌹☕💯தேநீருக்கும், மதுவிற்கும் தங்களுக்குள் யார் பெரியவன் என்று ஒரு உரையாடல்…
தேநீர் – என்னைத்தானே உலகம் முழுவதும் காலை, மாலை நேரங்களில் விரும்பிக் குடிக்கிறார்கள்.. அதனால் நான் தான் பெருமைக்குரியவன்..
மது – என்னையும் தான் காலை மாலை, இரவு என எல்லா நேரங்களிலும் விரும்பிக் குடிக்கிறார்கள்..
அதனால் நானும் பெருமைக்குரியவனே..
தேநீர்- மக்களின் சந்தோஷம், துக்கம், வரவேற்பு, கொண்டாட்டம் என எல்லா நிகழ்வுகளிலும்
நான் இருப்பேன்.. அவர்களுக்கு மகிழ்வான நேரத்தில் மகிழ்ச்சி கொடுப்பேன்.. கஷ்டமான நேரத்தில் ஆறுதலும் அளிப்பேன்..
மது – மனிதர்களிடம் கேட்டுப்பார், அவர்களுக்கு சந்தோஷமோ, துக்கமோ என்னிடம் தான் வருவார்கள்.. நான் தான் அவர்களுக்கு எப்போதும் துணை.. என்னிடம் நீ, போட்டி போடவே முடியாது.
தேநீர் – ஏழைகளுக்கு உணவாகவும், எல்லாக் குடும்பங்களின் விருந்துகளிலும், பல பெரிய மனிதர்களின் சந்திப்புகளிலும்
நான் தான் முதன்மையானவன்..
நீ இல்லை…
மது – ஏழைகள், தங்கள் வாழ்வின் துயரத்தை மறக்க என்னிடம் தான் வருவார்கள்.. தவிர பெரிய மனிதர்களின் விருந்திலும் எனக்குத்தான் மரியாதை.. உனக்கு இல்லை…
என்னிடம் நீ போட்டி போடவே முடியாது… என் மதிப்பை மக்களிடம் கேட்டுப்பார்.. லட்சக்கணக்கில் என் மதிப்பு இருக்கும் …
ஆனால் நீ மலிவானவன்…
எந்த நிலையிலும் நீ எனக்குச் சமமானவன் இல்லை.
ஓடிப் போய்விடு…
நானே மதிப்பானவன்..
நானே உயர்ந்தவன்…
தேநீர் – ஆமாம்,
நீ உயர்ந்தவன் தான்..
உனக்கு, நான் சமமானவன் இல்லை தான்..
ஆனால் என்னைக் குடிப்பவர்களின் உடல் நிலையை உன் அளவிற்கு நான் கெடுப்பதில்லை.
என்னைக் குடித்துவிட்டு யாரும் போதையில் தடுமாறுவதில்லை.. பெண்களிடம் , சிறுமிகளிடம் தவறாக நடக்க முற்படுவதில்லை.. போதையில் விபத்துக்குள்ளாகி குடும்பங்களை நடுத்தெருவில் விடுவதில்லை..
என்னைக் குடிப்பதால் யாரும் மானம் மரியாதை, சொத்து, வருமானம், என எதையும் இழப்பதில்லை…
யாருடைய குடியையும்
நான் கெடுப்பதும் இல்லை… இப்போது சொல்..
நான் தானே பெரியவன்??
மது – ஆமாம்.. உண்மை தான்… நான் எவ்வளவு தான் உயர்நதவனாகவும், விலை மதிப்பானவனாக இருந்தாலும் என்னால் கெடுதல் தான் அதிகம்.. நான் பெருமை பட்டுக் கொள்ள ஒன்றுமில்லை.. போட்டியிலிருந்து விலகிக் கொள்கிறேன்..



