நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. போலியான பரிசுகள் வழங்குவது, ATM அட்டை Lock ஆகியுள்ளது என்று கூறி பல காலமாக மோசடிகள் நடத்தப்பட்டு வருகிறது. சில மோசடி நிறுவனங்கள் பொதுமக்கள் செல்போன்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி மோசடி செய்து வருகின்றனர். இது போன்று பல்வேறு நூதன முறையில் மோசடிகள் நடந்து வருகிறது.
தற்போது இது குறித்து வெளியாகியுள்ள தகவலின்படி இந்தியாவில் டிஜிட்டல் மோசடிகள் ஓராண்டில் 300% க்கும் மேல் உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 2022-23 நிதியாண்டில் ₹277.34 கோடி மதிப்பிலான 6,699 டிஜிட்டல் மோசடிகள் நடந்த நிலையில், 2023-24 நிதியாண்டில் ₹1,457 கோடி மதிப்பிலான 29,082 மோசடிகள் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.




