கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே உள்ள ஒரு வீட்டில் தாய் மற்றும் அவரது மகள் வசித்து வருகின்றனர். சம்பவத்தன்று வீட்டின் கதவை தட்டும் சத்தம் கேட்ட இருவரும், ஜன்னல் வழியாக பார்த்துள்ளனர். அப்போது, ஒருவர் நிர்வாணமாக கையில் மண்வெட்டியுடன் நின்றுள்ளார். தொடர்ந்து, அந்நபர் வீட்டின் ஜன்னலை உடைக்க தொடங்கினார். இதனால், இருவரும் கதறிய நிலையில், அக்கம்பக்கத்தினர் சென்று அந்நபரை பிடித்து போலீசில் ஒப்படைத்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




