மத்தியப் பிரதேசம் திகம்கர் மாவட்டத்தை சேர்ந்த மிதிலா, திருமணமாகி 6 மாதங்களிலேயே ஆண் குழந்தையை பெற்றதால் கணவர் வீட்டில் அவமதிக்கப்பட்டுள்ளார். இதனால் மனமுடைந்த தாய் வீட்டிற்கு சென்ற அவர், தன்னுடைய சிக்கலுக்கு குழந்தையே காரணம் என நினைத்து, தாயுடன் சேர்ந்து குழந்தையை கொல்ல முடிவு செய்துள்ளார். இருவரும் சேர்ந்து 25 நாள் பச்சிளங் குழந்தையை குளத்தில் எறிந்தனர். அதை பார்த்த லலன் என்ற இளைஞர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.




