தந்தையும் மகளும் ஆற்றை கடந்து செல்கிறார்கள்!!
அப்பா மகளிடம் சொல்கிறார்!!
” அம்மு!! அப்பாவின் கையை பிடித்து கொண்டு வா! அம்மா! ” என்று
அதற்கு அன்பு மகள் சொல்கிறார்
” அப்பா!! நீங்கள் என் கையை பிடித்து கொண்டு வாருங்கள்! ” என்றார்!!
உடனே அப்பா !!
“அம்மா நீ! என் கையை பிடித்து கொண்டு வருவதற்கும்!! நான் உன் கையை பிடித்து கொண்டு வருவதற்கும் என்னம்மா வித்தியாசம் ” என்று கேட்க
அதற்கு அன்பு மகள்!!
” அப்பா!! ஆற்றை கடக்கும் போது எதாவது ஒரு தருணத்தில் நான் பிடித்திருக்கும் கையை விட்டுவிடலாம்!!
ஆனால் நீங்கள் என் கையை பிடித்து இருந்தால் எந்த தருணத்திலும் என் கையை விட மாட்டீர்கள்! ” என்றார்!!
அப்பா! உச்சி குளிர்ந்து போனார்!




