படித்ததில் பிடித்தது: யாரிடமிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளலாம்..!!

ஒரு ஊரில் ஞானி ஒருவர் இருந்தார். தனக்கு தான் எல்லாமே தெரியும் என்ற தலைக்கணம் எப்போதும் அவரிடம் இருந்தது. இதனாலேயே யாரையும் மதிக்கமாட்டார்.

 

ஒரு நாள் இரவு நேரம் வீதியில் நடந்து சென்றுகொண்டிருந்தார். அப்போது அவர் எதிரே ஒரு குழந்தை எரிகிற மெழுகுவர்த்தி ஒன்றை எடுத்துக் கொண்டு வந்தது.

 

அந்த குழந்தையை பார்த்ததும் தனது திறமையை அந்த குழந்தையிடம் காட்டி திணறடிக்க விரும்பினார். அந்த குழந்தையிடம் சென்று வேடிக்கையாக கேட்டார்.

 

“ஏன் பாப்பா இந்த மெழுகுவர்த்தியை நீயாவை கொளுத்தினாயா”

 

“ஆமாம்” என்றது அந்த குழந்தை.

 

“சரி இந்த மெழுகுவர்த்தி முதல் எரியாமல் தானே இருந்தது. ஆனால், இப்போது எரிகிறது.”

 

“ஆமாம்…”

 

“இந்த மெழுகுவர்த்திக்கு வெளிச்சம் எங்கே இருந்து வந்தது என்று காட்ட முடியுமா?” என்று கேட்டார்.

 

அதற்கு அந்த குழந்தை சிரித்தது.

 

இந்த மெழுகுவர்த்தியை ஊதி அணைத்து விட்டது.

 

அதன் பிறகு ஞானியை பார்த்து கேட்டது “இப்போ இந்த மெழுகுவத்தின் வெளிச்சம் போனதை பார்த்தீர்கள். அது எங்கே போனது என்று சொல்ல முடியுமா?” என்று இந்த குழந்தை இப்படி கேட்டதும் ஞானியின் ஆணவம் அழிந்தது.

 

தான் படித்ததெல்லாம் அந்த வினாடியில் சுக்கு நூறாகிவிட்டதை உணர்ந்தார்.

 

தனது முட்டாள்தனத்தை தானே உணர்ந்து கொண்டார்.

 

இதனால் நாம் இன்னாரிடமிருந்து இதைத்தான் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதில்லை யாரிடமிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளலாம்.

Read Previous

படித்ததில் பிடித்தது: இந்த மாதிரி நல்ல வாழ்க்கைத் துணை இருந்தாலே போதும்..!!

Read Next

குறைகளோடு படைக்கப்பெற்றவர்கள்தான் நாம் அனைவரும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular