சிவகாசி-சாத்தூா் சாலையில் மயிலாடுதுறை கிராமத்தில் உள்ள பட்டாசுக் கடையில் நேற்று (அக்.05) தீ விபத்து ஏற்பட்டது. வாடிக்கையாளருக்கு பட்டாசை வெடித்துக் காட்டியபோது, தீப்பொறி பறந்து கடையில் விழுந்ததால் தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் லட்ச ரூபாய் மதிப்பிலான பட்டாசுகள் எரிந்து நாசமாயின. விதிமுறையை மீறி கடையின் முன் பட்டாசுகளை வெடித்துக் காட்டியதால் விபத்து ஏற்பட்டதாக போலீஸாா் தெரிவித்துள்ளனா். போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.




