பட்டாம்பூச்சிகளை துரத்த வேண்டாம்..!! ஒரு மதிப்புமிக்க வெற்றிப் பாடம் கொண்ட கதை..!!

Oplus_131072

“பட்டாம்பூச்சிகளை துரத்த வேண்டாம்”

ஒரு மதிப்புமிக்க வெற்றிப் பாடம் கொண்ட கதை.

ஒரு சிறுவன் தன் தாத்தாவிடம் கேட்டான்.
“தாத்தா, நான் நடிகனாக வேண்டும், சினிமாவில் நடிக்க வேண்டும். நான் வளர்ந்ததும், உலகத்தைப் பார்க்கவும், நல்ல கார்களை ஓட்டவும், கண்ணாடியால் ஆன வீட்டில் வாழவும் விரும்புகிறேன். நான் உண்மையில் வாழ்க்கையில் மிகப்பெரிய வெற்றிபெற விரும்புகிறேன். சொல்லுங்கள், நான் எப்படி எனது எல்லா இலக்குகளையும் அடைவது, அவற்றை விரைவாக எட்டி பிடிப்பது?”

தாத்தா ஒரு கணம் நிறுத்தி, திரும்பிப் பார்த்தார், பின்னர் ஒரு அழகான பட்டாம்பூச்சி ஒரு பூவில் அமர்ந்திருப்பதைக் கண்டார். உடனே அவர் கத்தினார்..

“ஆஹா! என்ன ஒரு அற்புதமான பட்டாம்பூச்சி! ​​சீக்கிரம்… சீக்கிரம், அதைத் துரத்து! போய் அதைப் பிடித்துக் கொண்டு வா! அதை பறக்க விட்டு விடாதே. பிடி போ..

இளைஞன் அவசரமாக பட்டாம்பூச்சியிடம் ஓடினான், ஆனால் அவன் அதைப் பிடிக்க முயன்றபோது, ​​பட்டாம்பூச்சி திடீரென்று காற்றில் பறந்தது. அவன் அதைப் பிடிக்க முயன்றான், ஆனால் அது மிகவும் வேகமாக பறந்து கொண்டிருந்தது. அவன் சோர்ந்து போகும் வரை தோட்டத்தை சுற்றி சுற்றி ஓடினான், ஆனாலும், அவனால் அந்த பட்டாம்பூச்சியை பிடிக்க முடியவில்லை. மூச்சிரைக்க, தாத்தாவிடம் திரும்பினான்.

“என்னால் பிடிக்க முடியவில்லை தாத்தா! பறந்து போய் விட்டது!”

தாத்தா ஒரு கணம் சிரித்துவிட்டு, அந்த இளைஞனின் கைகளை பிடித்து ஒரு மூலைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் மெதுவாக பேச ஆரம்பித்தார்..

“கவனமாக கேள், நான் உனக்கு ஒரு மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடம் சொல்கிறேன், நீங்கள் வண்ணத்துப்பூச்சிகளைத் துரத்துவதில் உங்கள் நேரத்தைச் செலவிட்டால், அவை பறந்துவிடும், ஆனால் நீங்கள் ஒரு அழகான தோட்டத்தை உருவாக்க உங்கள் நேரத்தை செலவிட்டால், வண்ணத்துப்பூச்சிகள் உங்களிடம் வரும்.

அந்த பட்டாம்பூச்சி, உங்கள் வாழ்க்கையின் இலக்குகளைப் போன்றது, உடனடியாக இலக்குகளை அடைந்து வெற்றிபெற வேண்டும் என நினைப்பது எளிது, ஆனால் நாம் நமது திறமைகளில் கவனத்தை செலுத்தும்போது உண்மையான மந்திரம் நிகழ்கிறது, அருமையான தோட்டத்தை வளர்த்து பட்டாம்பூச்சிகளை வரவழைப்பது போல, உங்கள் திறமைகளை வளர்த்துக்கொண்டு வெற்றிகளையும் பணத்தையும் உங்களிடம் வர வையுங்கள். அன்பையோ, பணத்தையோ, வெற்றியையோ துரத்தாதீர்கள், அதுவே உங்களைத் தேடி வரும். ஆகவே உங்கள் ஆற்றலை, திறமையை வளர்ப்பதில் கவனம் செலுத்துங்கள்.. வெற்றியாளர்களின் ரகசியம் இது ஒன்றுதான்.

 

Read Previous

கனரா வங்கியில் ஜூனியர் ஆபீசர் வேலைவாய்ப்பு..!! சம்பளம்: Rs.34,800..!! தேர்வு கிடையாது..!!

Read Next

கெட்டாலும் மேன் மக்கள் மேன்மக்களே..!! என்பதை உணர்த்திய அருமையான பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular