Oplus_131072
பனங்கற்கண்டு சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்!
பனங்கற்கண்டு சாப்பிடுவதால் பல நன்மைகள் நம் உடலுக்கு கிடைக்கிறது. நம் முன்னோர்களின் காலகட்டத்தில் எல்லாம் பனங்கற்கண்டு என்பது வீட்டு வைத்தியங்களுக்கு பயன்படுத்துவார்கள். பனங்கற்கண்டில் உள்ள நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் நாம் பார்க்கலாம்.
பதனியை நன்கு காய்ச்சி பனங்கற்கண்டு தயாரிக்கப்படுகிறது. பனங்கற்கண்டு இருமல், மார்புச்சளி தொண்டை கரகரப்பு போன்றவற்றை குணப்படுத்துவதில் சிறந்தது. பனங்கற்கண்டை வாயில் போட்டு, அதை கொஞ்சம் கொஞ்சமாக கரைத்து அந்த உமிழ் நீரை விழுங்கி வந்தால், வாய்ப்புண், தொண்டை வலி, வாய் துர்நாற்றம் போன்றவை முற்றிலுமாக நீங்கும். கருவுற்ற பெண்களுக்கு ஏற்படும் மலச்சிக்கல் மற்றும் வயிற்றுப் புண்களை இவை சரி செய்ய உதவுகிறது.




