ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் அர்காண்டி பகுதியில் இன்று அதிகாலை பயணிகள் பேருந்து ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 25 பேர் உயிரிழந்தனர். ஹெல்மண்ட் மற்றும் காந்தஹார் மாகாணங்களைச் சேர்ந்த பயணிகளுடன் பேருந்து பயணித்துக் கொண்டிருந்த போது விபத்து நடந்துள்ளது. ஓட்டுநர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டியதே விபத்துக்குக் காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் 27 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.




