Oplus_131072
பலாப்பழம்
ஒரு அரசன் தன் வாழ்நாளில் உண்ணாத பழமொன்றை கொண்டு வருபவருக்கு 1000 பொன் பரிசளிக்கப்படும் என்றும், ஏற்கனவே உண்ட பழங்களைக் கொண்டு வருபவர்களுக்கு அதே பழத்தை அவர்களின் வாய்க்குள் அப்படியே திணிக்கப்படும் என்றும் அறிவித்தார்.
அடுத்தநாள் காலையிலேயே நீண்ட வரிசையில் மக்கள் பழங்களுடன் காத்திருந்தார்கள். வாழைப்பழம், மாம்பழம் இப்படியே பல பழங்களுடன் வந்தவர்கள் அவர்களின் வாய்க்குள் திணிக்கப்பட்ட நிலையில், அன்னாசிப்பழத்துடன் வந்தவரின் வாயில் இரத்தம் பீறிட்டும் அவர் வாய்விட்டு சிரித்துக் கொண்டிருந்தார்…
அவன் சிரிப்பதைக் கண்ட அரசன் கோபத்தில், ஏன் சிரிக்கிறாய்? எனக் கேட்டார். எனக்குப் பின்னால் பலாப்பழத்துடன் நிற்பவரை நினைத்து சிரித்தேன் மன்னா என்று கூறினான்.




