விஜய் சேதுபதி தொகுத்து வரும் பிக்பாஸ் தமிழ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து சோசியல் மீடியாவில் முக்கியமான தகவல் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் பிரம்மாண்டமாக ஆரம்பித்து மக்களை வெகுவாக கவர்ந்த நிகழ்ச்சி தான் பிக் பாஸ். ஹிந்தியில் தொடங்கிய இந்த ஷோ தற்போது தமிழில் 7 சீசன்கள் கடந்து 8வது சீசன் பைனலை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியை மக்கள் செல்வன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். மேலும் பிக் பாஸ் 8ல் மொத்தம் 24 போட்டியாளர்கள் கலந்து கொண்ட நிலையில், தற்போது 5 போட்டியாளர்கள் பைனலுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
அதன்படி முத்துக்குமரன், சௌந்தர்யா, விஜே விஷால், பவித்ரா மற்றும் ரயான் ஆகிய ஐந்து போட்டியாளர்கள் தான் பைனலிஸ்ட்டாக தேர்வாகி உள்ளனர். எதிர்பாராத விதமாக ஜாக்குலின் வெளியேறியது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது என்று தான் சொல்ல வேண்டும். இதனை தொடர்ந்து இன்று பவித்ரா மற்றும் ரயான் குறைந்த வாக்குகள் பெற்றவர்களில் கடைசி இரண்டு இடத்தை பிடித்ததால் அவர்கள் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறி உள்ளனர்.
இந்நிலையில் பிக்பாஸ் சீசன் 8 டைட்டில் வின்னர் யார் என்பது குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதாவது மக்கள் செல்வன் விஜய் சேதுபதி முதன் முதலாக தொகுத்து வழங்கி வரும் பிக் பாஸ் 8 டைட்டிலை முத்துக்குமரன் தட்டி தூக்கியுள்ளார். ரன்னர் அப்பாக சௌந்தர்யா வந்துள்ளார் என்று கூறப்படுகிறது. இதனால் சௌந்தர்யா ரசிகர்கள் மன உளைச்சலில் இருந்து வருவது மட்டுமின்றி, விஜய் டீவியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.




