பிழைக்க தெரியணும்..!! சிரியுங்கள்..!! சிந்தியுங்கள்..!! கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க மக்களே..!!

Oplus_131072

பிழைக்க தெரியணும். சிரியுங்கள்! சிந்தியுங்கள்!

அதிலும் சாமர்த்தியமாக பிழைக்க தெரியணும்..

ஒரு நாள், நாய் ஒன்று காட்டில் வழி தவறி சென்று விட்டது.

அப்பொழுது, அங்கு சிங்கம் ஒன்று பசியோடு அலைவதை பார்த்த நாய், ஒரு நிமிடம் பதறி இன்றோடு நம் கதை முடிந்தது என்று எண்ணியது.

அப்பொழுது அங்கு கிடந்த எலும்பு துண்டுகளைப் பார்த்ததும் அருமையான திட்டம் ஒன்றை தீட்டியது.

சிங்கம் வரும் வழியில் திரும்பி உக்கார்ந்து கொண்டு, எலும்பு துண்டுகளை சுவைக்க தொடங்கியது.

சுவைத்து கொண்டே சத்தமாக, சிங்கத்தை கொன்று தின்பது எவ்வளவு சுவையாக உள்ளது, ஆனால் வயிறு நிறையவில்லை. இன்னொரு சிங்கம் கிடைத்தால், ஆஹா! வயறு நிறைந்து விடும்” என்று கூறியது.

இதைக் கேட்ட சிங்கம் “அய்யோ..! இந்த நாய் சிங்கத்தை அல்லவா கொன்று தின்கிறது” என்று நினைத்து பயந்து அங்கிருந்து ஓடி போனது.

இதையெல்லாம் மரத்தின் மேல் இருந்து குரங்கு ஒன்று பார்த்து கொண்டிருந்தது.

சிங்கத்தை ஏமாற்றிய இந்த நாயை சிங்கத்திடம் போட்டுக் கொடுத்தால், சிங்கத்தின் நடப்பை பெற்று வாழ் நாளெல்லாம் பயம் இல்லாமல் வாழலாம் என்று நினைத்தது.

உடனே சிங்கத்திடம் சென்று, நாய் செய்த தந்திரத்தைப் பற்றி சொன்னது.

அதை கவனித்த நாய், எதோ தப்பு நடக்க போகிறது என்று உணர்ந்தது.

குரங்கு சொன்னதைக் கேட்ட சிங்கம் கோபம் கொண்டு, “இப்பொழுது அந்த நாயை என்ன செய்கிறேன் பார். நீ என் முதுகில் ஏறிக் கொள்” என்று குரங்கை முதுகில் ஏந்திய படி நாய் இருந்த இடத்தை நோக்கி ஓடியது.

தன்னை நோக்கி சிங்கம் பாய்ந்து வருவதைப் பார்த்த நாய், முன் போலவே திரும்பி உட்கார்ந்து கொண்டு, “இந்த குரங்கை அனுப்பி ஒரு மணி நேரமாகிவிட்டது. இன்னும் ஒரு சிங்கத்தைக் கூட ஏமாற்றி அழைத்து வரவில்லையே” என்று உரக்க கூறியது.

இதை கேட்டதும், சிங்கம் குரங்கைத் தூக்கி எறிந்து விட்டு திரும்பிக்கூட பார்க்காமல் ஓடியே விட்டது.

நாம் பணிபுரியும் இடத்தில் பல குரங்குகள் நம்மை சுற்றி இருக்கலாம், அவர்களை அடையாளம் காண முயற்சி செய்யுங்கள்.

“கடுமையாக உழைப்பதை (Hard Work) விட திறமையாக உழைக்கக் (Smart Work) கற்று கொள்ள வேண்டும்”.

Read Previous

அல்சர் நோய் உள்ளவர்கள் இஞ்சி சாப்பிடலாமா..?? நிச்சயம் கூடாது..!!

Read Next

நமது செயல்கள் நன்றாக இருந்தால்.. நமது வாழ்க்கை நன்றாக இருக்கும் என்பதை உணர்த்திய பதிவு..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular