பீர் குடிப்பதன் மூலம் சிறுநீரக கற்கள் வெளியேறும் என்பது ஒரு தவறான நம்பிக்கையாகும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். பீர் குடிக்கும்போது அதிக அளவில் சிறுநீர் வெளியேறுவதால், 5 மில்லி மீட்டருக்கும் குறைவான சிறிய கற்கள் வெளியேற வாய்ப்புள்ளதே தவிர, பெரிய அளவிலான கற்கள் அதன் மூலம் கரையவோ அல்லது வெளியேறவோ வாய்ப்பில்லை. மாறாக, பீர் அதிகம் குடிப்பதால் உடலில் நீர்ச்சத்து குறைந்து, புதிய சிறுநீரகக் கற்கள் உருவாகலாம் என கூறப்படுகிறது.




