புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்..!! மகளைப் பெற்ற பெற்றோர்களுக்கு இந்த பதிவு சமர்ப்பணம்..!!

Oplus_131072

புதுசா கல்யாணம் ஆன கணவன் மனைவி இடையே ஒரு ஒப்பந்தம்”…..!!

இன்று ஒரு நாள் மட்டும்…., “யார் வந்தாலும் கதவை திறக்க கூடாது என்று முடிவெடுத்தனர்”……!!

அன்றே..,
” கணவனுடைய அம்மா அப்பா வந்தனர் “…..!!

இருவரும் அவர்கள் வருவதை…,

“ஜன்னல் வழியாக பார்த்துவிட்டனர்”……!!

இருவரும் ஓருவரை ஓருவர் பார்த்து கொண்டனர்…..!!

“கணவனுக்கு கதவை திறக்க வேண்டும் என்ற ஆசை”……!!

ஆனால் ,
“ஒப்பந்தம் போட்டு விட்டதால்”….,

“அதை மீற மனமின்றி கதவை திறக்க வில்லை அவன்”…….!!

அவர்கள் வீட்டில் யாரும் இல்லை என்று நினைத்து…..,

” திரும்பி போய் விட்டனர்”……!!

கொஞ்ச நேரம் கழித்து….. ,

“மனைவியின் அம்மா அப்பா வந்தனர்”…..!!

கதவை தட்டினார்கள்….!!

” இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்”…..!!

ஆனால்,

” மனைவிக்கு கண்கள் கண்ணீரால் குளமானது”…….!!

” என்னால் கதவை திறக்காமல் இருக்கமுடியாது ” …..,

என்று சொல்லி கதவை திறந்தாள்.

ஆனால் ,
“கணவன் ஒன்றும் சொல்ல வில்லை”……!!

வருஷங்கள் உருண்டோடின….!

“இரண்டு ஆண் குழந்தை பிறந்தது”….!!

மூன்றாவதாக….,

“பெண் குழந்தை பிறந்தது”……!!

கணவன்…,
” பெண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில்”…… ,

பெரிய அளவில் செலவு செய்து…..,

” அனைவருக்கும் பார்ட்டி கொடுத்து கொண்டாடினான்”…….!!

அதற்கு மனைவி ,

“இரண்டு ஆண் குழந்தை பிறந்த போது”……,

” இவ்வளவு பெரிய அளவில் கொண்டாட வில்லை”…….!!

” பெண் குழந்தை பிறந்தவுடன்”….,

” இவ்வளவு பெரிய பார்ட்டி கொடுக்கிறீங்களே ஏன்”……?
என்று கேட்டாள் …..!!

அதற்கு கணவன்….,

” ரொம்ப நிதானமாக சொன்னான்”.
எதிர்காலத்தில்…..,
” எனக்காக கதவை திறக்க”.
” ஓரு பெண் பிறந்துவிட்டாள் “!!
என்றான் கர்வத்துடன்….!!!
பெண்களை பெற்ற அனைவருக்கும் சமர்ப்பணம்..

Read Previous

வீட்டிலேயே சுவையான மற்றும் மணம் நிறைந்த குழம்பு தூள் செய்வது எப்படி..??

Read Next

உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் சிறுநீரக செயலிழப்பு.. முன்கூட்டியே கண்டறிந்து தடுப்பது எப்படி?..

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular