புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 முதல் 90 சதவீதம் பேர் கடுமையான மலச்சிக்கல் சிக்கலை எதிர்கொள்வதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. புற்றுநோய் சிகிச்சையின் ஒரு பகுதியாக வழங்கப்படும் ‘ஓபியாய்டு’ வகை வலி நிவாரணிகள் மற்றும் கீமோதெரபி மருந்துகள் குடலின் இயக்கத்தை மந்தப்படுத்துவதே இதற்கு முதன்மையான காரணமாகும். இதனை தவிர்க்க நார்ச்சத்து மிகுந்த உணவுகளை உட்கொள்வதும், போதிய அளவு நீர் அருந்த வேண்டும் என கூறப்படுகிறது.




