திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி அருகே 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக சரவணன் (41) என்பவரரை போலீசார் கைது செய்துள்ளனர். விளையாடிக் கொண்டிருந்த 1ம் வகுப்பு படிக்கும் சிறுமியை சுடுகாட்டுக்கு அழைத்துச் சென்று வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் சரவணன் என்பவர் கைது செய்யப்பட்டு, தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.




