பெண்ணின் தாலிக்கொடியை பறித்துச்சென்ற குடுகுடுப்பைக்காரர்கள்..!!

பெண்ணின் தாலிக்கொடியை பறித்துச்சென்ற குடுகுடுப்பைக்காரர்கள்..!!

வேடசந்தூர் அருகே பரிகாரம் செய்வது போல நடித்து பெண்ணின் தாலிக்கொடியை பறித்துச்சென்ற குடுகுடுப்பைக்காரர்கள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம், அவரது கணவர் மற்றும் குழந்தைகளின் உயிருக்கு ஆபத்து உள்ளதாகக் கூறிய குடுகுடுப்பைக்காரர்கள் 2 பேர், அதற்கு பரிகாரமாக அருகிலுள்ள கோயிலுக்கு சென்று பூஜை செய்ய வேண்டும் எனக்கூறி, அவரது தாலிக்கொடியை வாங்கி சென்றதாக கூறப்படுகிறது. அவர்கள் திரும்ப வரவில்லை என ஜோதி அளித்த புகாரின் பேரில், குடுகுடுப்பைக்காரர்கள் தங்கும் இடத்துக்கு சென்று தந்தை, மகனான அந்த இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

Read Previous

இந்திய அணிக்கு நியூசிலாந்து கேப்டன் சவால்..!! இன்று 2-வது டெஸ்ட் போட்டி தொடக்கம்..!!

Read Next

சட்டவிரோத ஸ்கேன்சென்டர்..!! தந்தை, மகனுக்கு 5 ஆண்டுகள் சிறை..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular