ராஜபாளையத்தில் நடைபெற்ற தவெக நிகழ்ச்சியில் அமைச்சர் ஜெகதீஸ்வரி, தன்னை விமர்சிப்பவர்கள் குறித்து கடுமையாகப் பேசியுள்ளார்.
“இது பெண் பிள்ளைதானே, இதை என்ன வேண்டுமானாலும் செய்து பார்க்கலாம் என நினைக்கிறார்கள்” என அவர் கூறினார்.
மேலும், தனது கேரக்டர் குறித்து விமர்சித்து அவமானப்படுத்தினாலும் பயந்து வீட்டிற்குள் முடங்கிவிட மாட்டேன் என்றும், தன் மீது எத்தனை பொய்ப் புகார்கள் கூறப்பட்டாலும் ஓடி ஒளியப் போவதில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
“சிங்கக் குட்டிபோல் சீறி வருவேன். தளபதியின் தங்கையாக, அவரது வழிகாட்டுதலின்படி மீண்டும் மீண்டும் எழுந்து வருவேன்” என்றும் அமைச்சர் ஜெகதீஸ்வரி கூறியுள்ளார்.




