திருச்செந்தூர் முருகன் கோயில் அர்ச்சகரை அமைச்சர் ரமேஷ் அவமதித்து விட்டதாக திமுக எம்எல்ஏ அனிதா ராதாகிருஷ்ணன் குற்றம்சாட்டிருந்தார். மேலும், அமைச்சர் ரமேஷின் பெயரை ரமேஷ் ஐயங்கார் எனக் கூறி அறிக்கை வெளியிட்டார். இதற்கு எதிராக அமைச்சர் பதிவு வெளியிட்டுள்ளார். அதில், “மக்களை சுரண்டி பிழைப்பது யாராக இருந்தாலும் சாதி மத பாகுபாடு இன்றி நடவடிக்கை எடுக்க தான் மக்கள் வாக்களித்து வெற்றி பெற செய்துள்ளனர்” என பதிலடி கொடுத்துள்ளார்.




