நமது முன்னோர்கள் காலங்காலமாக தோஷங்களை அகற்றுவதற்கு சில வழிமுறைகளை பின்பற்றுவது வழக்கம், அப்படி இருக்கும் பட்சத்தில் இன்றைய தலைமுறையினர் அதற்கான உள் அர்த்தம் தெரியாமல் அந்த பரிகாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்..
மேலும் பெரியவர்கள் சொன்ன தோஷங்களை அகற்றும் பரிகாரங்கள் காகத்திற்கு உணவளித்தால் பித்ரு சாபம் சனி தோஷம் குறையும், பசுவிற்கு உணவளித்தால் ஐஸ்வரியம் செல்வம் கீர்த்தி கூடும், குருவிக்கு உணவளித்தால் குடும்பம் ஒன்றாகும் தம்பதியர் ஒன்றிணைவர், எருமைக்கு உணவளித்தால் எம பயம் அகலும் சனி பாதிப்பு குறையும், நாய்க்கு உணவு அளித்தால் கண் அடி விலகும் எதிரி பலம் குறையும், எறும்புக்கு உணவளித்தால் ஸ்ரீ மகாலட்சுமி விஜயம் பெருகும், குரங்குக்கு உணவளித்தால் புத்திர பாக்கியம் சந்தானவிருத்தி பெருகும், மானுக்கு உணவளிப்பது திருமண தடையை விலக்கி திருமண பாக்கியத்திற்கு கை கொடுக்கும், புறாவுக்கு உணவு அளித்தால் சிறு தோஷங்கள் அகலும், மேலும் முன்னோர்களுக்கு அம்மாவாசை அன்று திதி தருவதன் மூலம் நமது குடும்பப் பிரச்சனைகள் கடன் தொல்லைகள் விலகி குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும் முன்னோர்களின் ஆசிர்வாதம் கீட்டும்..!!




