மகனை கடித்த பாம்புடன் வந்த தாய்..!! பெரும் பரபரப்பு..!!

கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி அருகே திப்பனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ரவி. இவரது மகன் பூவரசன் (17). குப்பை அள்ளி அங்கிருந்த கிடங்கில் கொட்டினார். அப்போது குப்பைக்குள் மறைந்திருந்த சுமார் 1½ அடி நீளமுள்ள குட்டி பாம்பு பூவரசனை கடித்தது. கடித்த பாம்பை லாவகமாக பிடித்து ஒரு தண்ணீர் பாட்டிலில் அடைத்தனர். பின்னர் பூவரசனை அவரது தாய் போச்சம்பள்ளி மருத்துவமனைக்கு அழைத்து வரும் போது பாட்டிலில் அடைத்த பாம்புடன் வந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Read Previous

இனி யூடியூப் மூலம் பொருட்கள் ஆர்டர் பண்ணலாம்..!!

Read Next

படித்ததில் பிடித்தது: நிறை குடங்கள் எப்போதும் தளும்புவதில்லை..!! குறை குடங்களே கூத்தாடும்..!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Most Popular