நாடு முழுவதும் 2 கட்டங்களாக மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெற உள்ளது. வீடுகளை கணக்கெடுக்கும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதியும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி 2027 பிப்ரவரி 1-ஆம் தேதியும் தொடங்குகிறது. இதனுடன் சாதிவாரி கணக்கெடுப்பும் நடத்தப்படும். முதற்கட்ட பயிற்சி (மாதிரி கணக்கெடுப்பு) நவ., 10 முதல் 30 வரை நடக்கிறது. முதல்முறையாக பொதுமக்களே தங்கள் பெயர்களை சேர்த்துக் கொள்ளும் வசதி அறிமுகம் செய்யப்படுகிறது. இதற்கான சோதனை நவம்பர் 1 முதல் 7 வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




