மட்டன் சாப்பிட்ட சிறிது நேரத்திற்கு பால், தேநீர் மற்றும் இனிப்பு வகைகளை சாப்பிடுவது செரிமான கோளாறுகள் மற்றும் நெஞ்செரிச்சலுக்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். குறிப்பாக, மட்டனில் உள்ள இரும்புச்சத்தை உடல் உறிஞ்சுவதை தேநீரில் உள்ள டானின்கள் தடுப்பதுடன், பாலில் உள்ள புரதம் ஜீரண மண்டலத்திற்கு அதிக அழுத்தத்தை கொடுக்கிறது. மேலும், அசைவ உணவுக்கு பின் குளிர்ந்த பானங்கள் குடிப்பது கொழுப்பை உறைய செய்து அஜீரணத்தை உண்டாக்கும் என கூறப்படுகிறது.




