கேரளா: திருவனந்தபுரம், கமலேஸ்வரத்தில் தாயும் மகளும் சயனைடு சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்ட வழக்கில், மகளின் கணவர் உன்னிகிருஷ்ணன் கைது செய்யப்பட்டுள்ளார். அயர்லாந்தில் பணியாற்றி வரும் அவர் கேரளாவில் இருந்து வெளிநாட்டிற்கு தப்ப முயன்ற நிலையில், மும்பை விமான நிலையத்தில் போலீசார் கைது செய்தனர். கிரீமா என்பவரை உன்னிகிருஷ்ணன் 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்துள்ளார். 200 சவரன் தங்கம் வரதட்சணை கொடுத்துள்ளனர். சித்திரவதை காரணமாக தற்போது கிரீமாவும் அவரது தாயும், தற்கொலை செய்துகொண்டனர்.




